‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு

2 Min Read

புதுடில்லி, மே 6 தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம்  மறுத்து விட்டது. இந்த திரைப்படம் நாடு முழுவதும் நேற்று (5.5.2023) திரையிடப் பட்டது.

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உரு வாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. அதில், கேரளாவை சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு அய்எஸ் அய்எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக் கிறது. இதற்கு கேரளாவில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப் படத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்து தடை விதிக்க கோரி கடந்த 2, 3-ஆம் தேதிகளில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் முறையிடப்பட்டது. ஆனால் உச்சநீதி மன்றம் விசாரிக்க மறுத்தது. இதைத் தொடர்ந்து 3-ஆவது முறையாக தலைமை நீதிபதியிடம்  மீண்டும் முறையிடப்பட்டது.

இதுகுறித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சிபிஎப்சி) ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நேரத்தில் தயாரிப்பாளர் நிலையில் இருந்து சிந்தித்து பார்க்க வேண்டும். அவர் எத்தனை சவால்களை எதிர்கொள்வார்? கேரள உயர் நீதி மன்றம், சென்னை உயர் நீதிமன்றம் என அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்படுகின்றன.

திரைப்படத்தில் நடிகர், நடிகை களின் கடின உழைப்பு இருக்கிறது. இதையும் கருத்தில் கொள்ளவேண் டும். எனவே திரைப்படங்களுக்கு தடை கோரும் வழக்குகளில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறோம். இந்த திரைப்படத்தின் தலைவிதியை மக்கள் தீர்மானிப்பார்கள். அவசர தேவையென்றால் மனுதா ரர்கள் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகலாம். இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார்.

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப் படத்துக்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஏற்கெ னவே வழக்கு தொடரப்பட்டிருக் கிறது. அந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தலைமை நீதிபதி சந்திரசூட் ஏற்கவில்லை.

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலை யாளத்தில் மே 5-ஆம் தேதி வெளி யாகும் என்று தயாரிப்பாளர் விபுல் ஷா ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *