மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் கொடை: ஏழு பேருக்கு மறுவாழ்வு

1 Min Read

அரசியல்

சென்னை, மே 6- அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்டதால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத் துக்கோட்டை தாலுகா, ஆமிதா நல்லூர் கிராமத்தில் வசித்து வந் தவர் சவுந்தரராஜன் (35). தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கீதாலட்சுமி என்கிற மனைவியும், 3 வயதில் மிதுன் மற்றும் ஒன்றரை வயதில் கவின் ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த 2ஆம் தேதி மாலை பணி முடிந்து வீடு திரும்பும்போது செங் குன்றம் அருகே சாலை விபத்தில் சவுந்தரராஜனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்குள்ள தனி யார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட அவர், பின்னர் மேல் சிகிச் சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார். சவுந்தர ராஜனின் உடல் உறுப்புகளை கொடை செய்ய அவரது உறவினர் கள் முன்வந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன.

ஒரு சிறுநீரகம், இரண்டு கண் கள், தோல் ஆகியவை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 4 நோயாளி களுக்கும், இதயம், நுரையீரல், மற்றொரு சிறுநீரகம் ஆகியவை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 3 நோயா ளிகளுக்கும் பொருத்தப்பட்டன. மூளைச்சாவு அடைந்த சவுந்தர ராஜனின் உடல் உறுப்புகள் கொடை யால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *