சென்னை, மே 6- பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 5.5.2023 அன்று முதல் 4.6.2023ஆம் தேதி வரை விண்ணப் பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் 431 கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கு 1,48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு நேற்று (5.5.2023) முதல் ஜூன் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
<https://tneaonline.org>, <https://tndte.gov.in> என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் அதிகமான இலவச சேவை மய்யங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டோரை பாதுகாக்கிறது பா.ஜ.க.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்
சென்னை, மே 6- “பிரதமரின் பொய் வாக்குறுதிகளுக்கு முரணாக, கத்துவா, உன்னாவ், ஹாத்ரஸ், பில்கிஸ் பானு எனப் பல வழக்குகளிலும் பாதிக்கப்பட்டோருக்குத் தொல் லையளிப்பதும், குற்றம்சாட்டப்பட்டோரைப் பாதுகாப்ப துமே பாஜகவின் அடையாளமாக இருக்கிறது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் தனது சமூக வலை தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தங்கள் சாதனைகளால் நாட்டிற்கே பெருமை தேடித் தந்த நமது மற்போர் வீரர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் பெரும் அநீதியைக் கண்டு அதிர்ச்சி அடைகிறோம். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
பெண்களுக்கு அதிகாரமளிப்பதைப் பற்றி நமது பிரதமர் தொடர்ந்து பிரசங்கம் செய்கிறார். ஆனால், அவரது பொய் வாக்குறுதிகளுக்கு முரணாக, கத்துவா, உன்னாவ், ஹாத்ரஸ், பில்கிஸ் பானு எனப் பல வழக்கு களிலும் பாதிக்கப்பட்டோருக்குத் தொல்லையளிப்பதும், குற்றம்சாட்டப்பட்டோரைப் பாதுகாப்பதுமே பாஜகவின் அடையாளமாக இருக்கிறது. நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.