புவனகிரி – பெருமாத்தூரில் புரட்சிக்கவிஞரின் 133 ஆவது பிறந்த நாள் விழா

Viduthalai
1 Min Read

அரசியல்

புவனகிரி, மே 7 – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 133ஆவது பிறந்த நாள் விழா, பாரதிதாசனின் துணைவியார் பழனியம்மாள் பிறந்த ஊரான பெருமாத்தூரில் திராவிடர் கழகம் சார்பில் – 29.4.2023 அன்று மாலை 6 மணிக்கு புரட்சிக்கவிஞரின் உறவினரான பெருமாத் தூர் பெரியார் பெருந்தொண்டர் பழனி யாண்டி (வயது 90) தலைமையில் நடை பெற்றது.

மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், பேரூராட்சி மன்ற தி.மு.க. உறுப்பினர் ராம.செல்லபாண்டியன், அ.இராம லிங்கம் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார்கள்.

மாவட்ட ப.க. தலைவர் த.செயராமன், கோ.நெடுமாறன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிற்பி.சிலம்பரசன், மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் ஆகியோர் உரையாற்றிய பின்னர், கழகப் பேச்சாளர் யாழ்.திலீபன், புரட்சிக்கவிஞரின் தமிழ் தொண்டு, பகுத்தறிவுக் கொள்கைக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டது புதுச் சேரியில் திராவிடர் கழகத் தலைவராகயிருந்து பணிபுரிந்தது  ஆகிய செய்திகளை விளக்க மாக உரைத்தார்.

நிகழ்ச்சியில், புவனகிரி ஒன்றிய செயலர் ஏ.பி.இராமதாசு, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலர் துரை.செயபால், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அ.சுரேஷ் ஆகி யோர் கலந்துகொண்டனர்.

புவனகிரி கழக தலைவர் த.ஆசீர்வாதம் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *