ராகுல் நடைப்பயணம் பிஜேபியை கலங்க செய்து விட்டது – சோனியா காந்தி பேச்சு

1 Min Read

அரசியல்

பெங்களூரு, மே 7 காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் நடைப் பயணத்தை பார்த்து பாஜக கலக்கம் அடைந்துள்ளதாக மேனாள்  காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.

கருநாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10ஆ-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சோனியா முதல் முறையாக ஹுப்ளியில்  நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தாவது:

நாட்டு மக்களிடையே வெறுப்பை விதைப்பதையே சிலர் வேலையாக கொண்டுள்ளனர். அவர்களுக்கு எதிராகவே ராகுல் காந்தி நடைப் பயணத்தை மேற்கொண்டார். வெறுப்பை விதைப்பவர்களால் கருநாடகாவுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. வளர்ச்சி, அமைதி ஆகியவற்றை ஏற்படுத்த முடியாது.

ராகுலின் நடைப் பயணத்திற்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதைக் கண்டு பாஜகவினர் கலக்கம் அடைந்துள்ள னர். பாஜக அரசு செய்த ஊழல், முறைகேடு, சட்டவிரோதம் குறித்து காங்கிரஸ் எழுப்பும் எந்தக் கேள் விக்கும் பாஜகவினர் பதில் அளிக்க மாட்டார்கள். ஜனநாயக மதிப் பீடுகள் தங்களின் சட்டைப் பையில் இருப்பதாக பாஜகவினர் நினைக் கிறார்கள்.

பாஜக அரசின் ஊழல், வெறுப்பு கலாச்சாரம், மோசடி ஆகியவற்றில் இருந்து விடுபட்டால் மட்டுமே கருநாடகா முன்னேற முடியும். இந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால் பிரதமர் மோடியின் ஆசி கருநாடகாவுக்கு கிடைக்காது என வெளிப்படையாக மிரட்டல் விடுக்கிறார்கள். இந்த மிரட்டலுக்கு க‌ருநாடக மக்கள் சரியான பதிலை அளிப்பார்கள். இந்த மிரட்டலுக்கு அஞ்சும் அளவுக்கு மக்கள் அவ்வளவு கோழைகள் அல்ல என்பதை பாஜக வினருக்கு கூறிக்கொள்ள விரும்பு கிறேன். கருநாடகாவை ஊழ லில் இருந்து விடுவித்து, நல்லாட்சி வழங்க காங்கிரஸை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *