சென்னை, கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின்போது, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் மரு.க.மாணிவாசன், பொதுப்பணித் துறை முதன்மைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, தலைமைப் பொறியாளர் அயர்தரசு ராஜசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.