தமிழ்நாடு இலவச லேப்டாப் திட்டம் என்று இணையதள விண்ணப்பச் செய்தி போலி! – அரசு விளக்கம்

1 Min Read

சென்னை, நவ.23 தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினி (லேப்டாப்) திட்டத்தில் பயன்பெற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முற்றிலும் போலியானது எனத் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் (Fact Check Unit) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், “தமிழ்நாடு இலவச மடிக்கணினி திட்டம் 2025 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது… விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன.

குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே உள்ளன! காலக்கெடு: 11/22/2025” எனக் கூறி ஒரு பதிவு செய்வதற்கான இணைப்புடன் (Link) செய்தி பரவி வந்தது.

சமூக வலைதளங்களில் பரவிய இந்தத் தகவல் உண்மையில்லை எனவும், இது முற்றிலும் தவறான தகவல் எனவும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தனது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது. இத்திட்டத்திற்காகத் தனியாக இணைய தளத்தில் விண்ணப்பிக்க எந்த அறிவுறுத்தலும் அரசு தரப்பில் இருந்து வரவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *