1918லேயே தமிழைச் செம்மொழியாக்க
நீதிக்கட்சி தீர்மானம்
தமிழைச் செம்மொழி என அறிவிக்க 1918-ஆம் ஆண்டில் நீதிக்கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1918 மார்ச் 30, 31 நாட்களில் தஞ்சை, திருச்சி பார்ப்பனரல் லாதார் முதல் மாநாடு நடை பெற்றது.
அம்மாநாட்டுத் தீர்மானங்களில் ஒன்று:
தீர்மானம் 8 (ஆ): எல்லாப் பழமையான மொழி களைப் போல பழமையான, வளமான, உயர்தரமாக உருவாக்கப் பட்ட பல திறப்பட்ட இலக்கியங்களைக் கொண்டது தமிழ் மொழி. இது பல்கலைக்கழகத்தால் பாரசீக, அரேபிய, சமஸ்கிருத மொழிகட்கு ஈடாக மதிக்கப்பட்டுச் செம்மொழி என ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும்.
முன்மொழிந்தவர்: திரு. ஜே.பி. நல்லுசாமி பிள்ளை பி.ஏ., பி.எல்., மதுரை
வழிமொழிந்தவர்: திரு. ந.மு.வேங்கடசாமி நாட்டார். தமிழ்ப் பண்டிதர், எஸ்.பி.ஜி. கல்லூரி, திருச்சிராப்பள்ளி,
ஆதரித்தவர்: திருமதி. அலர்மேலு மங்கை தாயாரம்மாள், சென்னை.
