இந்தியாவின் புதிய சாதனை : மக்கள் தொகையில் உலகில் முதலிடம்

2 Min Read

அரசியல்

ஜெனீவா, மே 9 இந்தியா மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி  முதலிடத் தைப் பிடித்துள்ளது. அண் மையில் அய்.நா. மக்கள் தொகை நிதியத்தின் (யுஎன்எஃப்பிஏ) உலக மக்கள்தொகை அறிக்கை 2023  வெளியானது. அந்த  அறிக்கையில் உலக மக்கள் தொகையில் இந்தியா 142.86 கோடி மக்கள் தொகையுடன் முதலிடத்திலும், சீனா 142.57 கோடி மக்கள் தொகையுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது தெரிய வந்துள் ளது. 

சீனா கடந்த  200 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தொகையில் முத லிடத்திலிருந்து வந்தது.   மொத்தமுள்ள இந்திய மக்கள் தொகையில் 14 வயது வரை 25 சதவீதம் பேரும், 15 முதல் 64 வயது வரை 68 சதவீதம் பேரும், 65 வயதுக்கு  மேற்பட்டவர்கள் 7 சதவீதம் பேரும் இருப் பதும் தெரியவந்துள்ளது. உலக அளவில் உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகையையே கொண்ட பாகிஸ்தானும் (சுமார் 23.14 கோடி), தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் தோரா யமாக மூன்றில் ஒரு பங் கையே கொண்ட இலங் கையும் (2.2 கோடி) பொரு ளாதார ரீதியாக மிகப் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன.  கரோனா பெருந்தொற்றின் பாதிப்பு, உக்ரைன் -ரசியா இடையேயான போர் போன்றவற்றின் காரண மாக, தமிழ்நாட்டின்  அள வுக்குக் கூட மக்கள்தொகை இல்லாத பல நாடுகள் பொருளாதாரரீதியாக கடும் சவாலை எதிர் கொண்டு திண்டாடிக் கொண்டிருக் கின்றன.

இந்நிலையில், கரோனாவுக்கு  தடுப்பூசி கண்டு பிடித்து  உலக நாடுகளுக்குக் கொடுத்த து. இந்தியாவில் கடந்த 2020-_2021 ஆம்   ஆண்டில் சாதனை அளவாக 109.59 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி செய்யப்பட்டுள் ளது.அது  2021_20-22 இல் வெப்ப அலை போன்றவற் றால் 106.84 மில்லியன் டன் னாக  குறைந்தது. இந்தியா பால் உற்பத்தியில்  முதலி டத்தில் உள்ளது. இந்தி யாவில் கடந்த ஆண்டு 183.96 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள் ளது. (அமெரிக்காவை விட 50 சதவீதம் அதிகம். சீனா வைவிட 3 மடங்கு அதிகம்).  இதனால் இந்தியாவில் ரூ.2,928 கோடி மதிப்பிலான 1.08 லட்சம் டன் பால் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *