சமையல் எரிவாயு விநியோகம் தாமதம்: மக்கள் அவதி

1 Min Read

 சென்னை. மே 10 – சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சமையல் எரிவாயு உருளை பதிவு செய்தால், 10 முதல் 20 நாட்கள் வரை தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

வீடுகள் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகளை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகம் செய்கின்றன. உருளை தீர்ந்து போனால், ஒருங்கிணைந்த குரல் சேவை பிரிவு மூலம் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். வழக்கமாக, பதிவு செய்த ஓரிரு நாட்களுக்குள் புதிய உருளை விநியோகம் செய்யப்படும். ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சமையல் எரி வாயு உருளை விநியோகம் தாமதம் ஆவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ‘முன்பெல்லாம் உருளை காலியானால், புதிய உருளை பெற, குறைந்தது 20 நாட்கள்முதல் 1 மாதம் வரை காத்திருக்கும் நிலை இருந்தது. இது படிப்படியாக குறைக்கப்பட்டு, முன்பதிவு செய்த ஓரிரு நாளிலேயே சமையல் எரிவாயு உருளை விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

மழை காலத்தில் மட்டும் உருளை வருவதற்கு சற்று தாமதம் ஆகும். மற்ற நாட்களில்எவ்வித பிரச்சினையும் இன்றி சிலிண்டர் விநியோகம் நடந்து வந்தது. இந் நிலையில், தற்போது மீண்டும் சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது. பதிவு செய்தால், 10 முதல் 20 நாட்கள் கழித்தே சமையல் எரிவாயு உருளை வருகிறது. இதுபற்றி கேட்டால், விநியோக ஏஜென்சிகளும் முறையாக பதில் அளிப்பது இல்லை’’ என்றனர். இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தற்போது பயன்பாட்டில் உள்ள ஆயுட் காலம் முடிந்த மற்றும் துருப்பிடித்த உருளைகள் மாற்றப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கேற்ப புதிய உருளைகள் வரத்து குறைவாக உள்ளது. தாமதத்துக்கு இதுவே காரணம். இப்பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும்’’ என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *