அரியலூர் ஆஞ்சநேயர் சிலை திருட்டு மீட்டவர் மனிதரே!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

பெரம்பலூர்,மே10 – அரியலூர் மாவட்டம், வெள்ளூர் கிராமத் தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து வெளி நாட்டுக்கு கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை மீட்கப்பட்டு, நேற்று (9.5.2023) மீண்டும் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம், வெள்ளூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்த ஆஞ்சநேயர் சிலை, 2012இல் காணாமல் போனது.

தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர், அந்த சிலை, அமெரிக்கா மியூசியத்தில் இருந்து, ஆஸ்திரேலியா நாட்டிற்கு விற்கப் பட்டதை கண்டுபிடித்தனர். கடந்த மாதம், ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட அந்த சிலை, நேற்று, வெள்ளூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஒப்படைக்கப் பட்டது.

ஆஞ்சநேயர் சிலையை, கோவிலில் ஒப்படைத்த பின், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேஷ்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

பொதுமக்கள் முன்னிலையில் கோவிலில் ஒப்படைக்கப்பட்ட அந்த சிலை, கோவிலில் வழிபாட்டுக்கு வைக்கப்படும். இந்த சிலையுடன் கடத்தப்பட்ட மூன்று சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுவரை, தமிழ்நாட்டிலிருந்து இருந்து வெளி நாடுகளுக்கு கடத்தப் பட்ட 23 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 64 சிலைகளை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *