மத்திய பிரதேச பிஜேபி ஆட்சியில் அவலம் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் கோர மரணம்

2 Min Read

அரசியல்

போபால், மே 10 மத்திய பிரதேசத்தின் தசங்கா பகுதியில் பாலத்தில் சென்ற பேருந்து, தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு, ஆற்றில் கவிழ்ந்தது. உள்ளூர் மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மத்தியப் பிரதேசத்தின் கார் கோன் மாவட்டம் பெஜாபுரா பகுதியில் இருந்து தனியார் பேருந்து நேற்று காலை 6.30 மணி அளவில் இந்தூருக்கு புறப் பட்டது. இதில் 69 பயணிகள் இருந்தனர். காலை8.30 மணி அளவில் கார்கோன் மாவட்டம் தசங்கா கிராமத்தில் உள்ள ஆற்றுப் பாலத்தில் சென்ற போது, திடீரென கட்டுப் பாட்டை இழந்த பேருந்து, தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 15 பேர் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர். மருத் துவமனையில் சேர்க்கப் பட்டு, 10 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத் தில் 44 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக் கும் என அஞ்சப்படு கிறது.

விபத்து குறித்து சுற்று வட்டார கிராம மக்கள் கூறிய போது, ‘‘சுமார் 50 அடி உயர பாலத்தில் இருந்து ஆற்றில் பேருந்து கவிழ்ந் தது. இதுகுறித்து காவல்துறையினருக்கு உடனே அலைபேசியில் தகவல் கொடுத் தோம். அவர்கள் வருவதற்கு தாமதம் ஆனதால், இப்பகுதி மக்கள் இணைந்து, உயிருக்கு போராடியவர்களை மீட்டு டிராக்டர்கள் மூலம் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தோம். கோடை காலம் என்பதால் ஆற்றில் தண்ணீர் இல்லை. தண்ணீர் இருந்திருந் தால் உயிரிழப்பு மேலும் அதிகரித்திருக்கும்’’ என்றனர்.

காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: 

‘மா சாரதா பஸ் சர்வீஸ்’ என்ற தனியார் பேருந்து வழக்கம்போல 9-ஆம் தேதி காலை பெஜாபுராவில் இருந்து புறப்பட்டுள்ளது. பேருந்தில் 52 இருக்கைகள் இருந்தன. ஆனால், அளவுக்கு அதிகமாக பயணி களை நடத்துநர் ஏற்றியுள்ளார். விபத்து நடந்தபோது பேருந்தில் 69 பயணிகள் இருந்துள்ளனர். தசங்கா பகுதியில் உள்ள ஆற்றுப் பாலத்தில் பேருந்து அதி வேக மாக சென்றுள்ளது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்து தடுப் புச் சுவரில் மோதி ஆற்றில் கவிழ்ந்துள்ளது. 

இந்த விபத்தில் 7 குழந்தைகள், 8 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு காவல் துறை வட் டாரங்கள் தெரிவித்தன

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *