நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுக்கும் குஜராத் பாஜக அரசு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

அகமதாபாத், நவ.16 பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில் சிஅய்டியு தொழிற் சங்கம் தலைமையில் நூற்றுக் கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடர்பான குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதற்கு பாஜக தலைமையிலான மாநில பாஜக அரசு மறுத்து வருகிறது. இதனை கண்டித்து சிஅய்டியு தலைமையில் இந்த மாபெரும் போராட்டம் நடைபெற்றுள்ளது.

இப்போராட்டத்தில் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதை கண்டித்தும், பணி நோக்கங்களுக்காக கைப்பேசிகள் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஊழியர்கள் முன் வைத்துள்ளனர். பாஜக அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் ஊழியர்களை பழி வாங்குவது போல் நடந்து வருகிறது. இந்நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் டிசம்பர் 1 முதல் 10 வரை அங்கன்வாடி ஊழியர்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *