நீதிமன்றத்தில் காலணி வீச்சுகளை தடுக்க நடவடிக்கை யோசனை கேட்கும் உச்சநீதிமன்றம்

2 Min Read

புதுடில்லி, நவ.13 நீதிமன்றங்களில் காலணி வீச்சு போன்ற சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக யோசனை தெரிவிக்குமாறு அட்டா்னி ஜெனரல் மற்றும் உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்திடம் உச்சநீதிமன்றம்  நேற்று (12.11.2025) கேட்டுக்கொண்டது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான கஜுராஹோ கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஜவாரி கோயிலில்  விஷ்ணு சிலையை மீண்டும் நிறுவுவது தொடா்பான மனுவை கடந்த மே 16-ஆம் தேதி தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் உத்தரவிட்டார். அப்போது பேசிய பி.ஆா்.கவாய், ‘இது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும். இந்த விவகாரத்துக்கு உங்களது கடவுளிடமே பதில் கோருங்கள்’ எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தலைமை நீதிபதி கவாய்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உச்சநீதிமன்றத்தில் கடந்த  செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி வழக்கு விசாரணையின்போது அவரை நோக்கி ராகேஷ் கிஷோர் என்ற வழக்குரைஞா் காலணியைக் கழற்றி வீசினார். எனினும் அந்தக் காலணி நீதிபதி மீது விழவில்லை. காலணி வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் வழக்குரைஞா் உரிமத்தை இந்திய பார் கவுன்சில் உடனடியாக ரத்து செய்தது.

அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி அனுமதியின் பேரில், ராகேஷ் கிஷோர் (71) மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையைத் தொடர வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவைப் பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோர் அடங்கிய அமா்வு, ‘இந்த விவகாரத்தில் வழக்குரைஞருக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே மறுப்பு தெரிவித்துவிட்டார். எனவே, அவருக்கு எதிராக குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள நீதிமன்றம் விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டது.

இந்த வழக்கு அதே அமா்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றங்களில் காலணி வீச்சு போன்ற சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக யோசனை தெரிவிக்குமாறு நீதிமன்றத்தில் ஆஜரான உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞா்களிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா். இதுபோல, அட்டா்னி ஜெனரலிடமும் யோசனை தெரிவிக்குமாறு கேட்கப்படும். இந்த யோசனைகளின் அடிப்படையில், நீதிமன்றங்கள் மற்றும் வழக்குரைஞா்கள் அறைகளில் இதுபோன்ற காலணி வீச்சு சம்பவங்களைத் தடுக்க நாடு முழுமைக்குமான வழிகாட்டுதலை வகுப்பது குறித்து உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும்’ என்று குறிப்பிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *