விழுப்புரம், நவ. 13– 7.11.2025 அன்று காலை 11 மணி அளவில் விழுப்புரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையேற்று கலந்துரையாடலின் நோக்கங்களை விளக்கி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக நகரத் தலைவர் ராசேந்திரன் கடவுள் மறுப்பு கூறவும்; மாவட்டத் தலைவர் சே.வ.கோபன்னா வரவேற்புரை கூறிட இயக்கப் பொறுப்புத் தோழர் கள் துரை. திருநாவுக்கரசு, ஆ.மு.ரா.இளங்கோவன், கோ.பூங்கான், சுடரொளி சுந்தரம்; க.கவுதமன், ச.பழனிவேல், ர.தவமணி, நா.காத்தவராயன், கி.ஏழுமலை, த.சிவராமன்; ஏ.இரமேஷ் ஆகியோர் கழக செயல்பாடுகள் பற்றிக் கூறினர்.
திமுக நகர செயலாளர் இர.சக் கரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமது ஆதரவினைத் தெரிவித்து கருத்துரை வழங்கினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் மாநிலம் தழுவிய “இதுதான் ஆர்.எஸ்.எஸ். இதுதான் திராவிடம்” என்ற பரப்புரைப் பொதுக் கூட்டத்தினை மிகச்சிறப் பாக நடத்திடவும்:
பெரியார் உலகத்திற்கு ரூபாய் பத்து இலட்சத்திற்கும் கூடுதலான நிதியை திரட்டி வழங்க தீர்மானிக்கப்பட்டது.
இறுதியில் மாவட்டச் செயலாளர் அரங்க. பரணிதரன் நன்றி கூறவும் கலந்துரையாடல் நிறைவுசெய்யப்பட்டது
கழகத் தோழர்கள் சூழ தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பெரியார் கொள்கையாளர் முனைவர் க.பொன்முடி அவர்களுக்கு கழகப் பொது செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சால்வை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
