பழங்குடியினருக்கு பட்டா வழங்கல்

Viduthalai
1 Min Read

அரசியல்

கிருஷ்ணகிரி, மே 11- 15 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் இருதுக்கோட்டை ஊராட்சி திருமாநகரில் குடியிருந்து வரும் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப் பட்டோர் சமூக மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சார் ஆட்சியர். தேன்கனிக்கோட்டை வட் டாட்சியர் ஆகியோர் பயனாளிகள் 108 பேருக்கு நேற்று (10.5.2023) குடியுரிமை பட்டா வழங்கினார்கள். 

இந் நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார்,தளிசட்டமன்ற உறுப்பினர் டி.ராமசந்திரன்,விடுதலை சிறுத்தை கட்சி நாடாளுமன்ற செயலாளர் செந்தமிழ், மாவட்ட துணைச்செயலாளர் செல்வம்,தொண்டரணி மாநில துணை அமைப்பாளர் சக்திவேல், உழவர் அணி மாவட்ட அமைப்பாளர் ஒச்சலப்பா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட னர். பட்டா பெற்றுகொண்ட அனைவரும் அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *