இதுதான் எஸ்.அய்.ஆரின் உண்மை நிலை! உத்தராகண்ட் மாநில பா.ஜ.க. தலைவர் பீகாருக்கும் சென்று வாக்களித்துள்ளார்!

1 Min Read

உத்தராகண்ட் மாநில பா.ஜ.க. தலைவர் டேராடூனில் வாக்காளராக இருந்துகொண்டே பீகாரிலும் வாக்க ளித்துள்ளார். அவரே வெளியிட்ட பதிவின் மூலம் இந்த உண்மை வெளி யானது

பாரதிய ஜனதா கட்சியின் உத்தராகண்ட் மாநிலத் தலைவர் பிரபாத் குமார் பீகாரில் தான் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றியதை பெருமை பட சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் இவருக்கு உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் முகவரியில் ஒரு வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. அதை வைத்து அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார்.

மிகப்பெரிய முரண்பாடு

இந்தியக் குடியுரிமை பெற்ற ஒரு நபர், ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு தொகுதிகளிலோ அல்லது மாநிலங்க ளிலோ வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய முரண்பாடாகும்.

தேர்தல் ஆணையத்தின் தரவுத்தளங்கள் தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு வாக்காளரின் தனிப்பட்ட அடை யாளத்தைப் பயன்படுத்தி (உதாரணமாக, ஆதார் எண் இணைப்பு அல்லது ஒரே ஒளிப்படம்) இரட்டைப் பதிவுகளைக் கண்டறிய வேண்டும்.

முறையான பரிசோதனையை ஏன் செய்யவில்லை?

டேராடூனில் செயல்படும் வாக்காளர் அடையாள அட்டை எண் இருக்கும்போதே, அதே நபர் பீகாரில் புதிய எண்ணைப் பெற முடிந்தால், புதிய பதிவு செய்யும் போது தேர்தல் பதிவு அதிகாரி முறையான பரிசோதனையை ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது.

எஸ்.டி. இண்டர்  கல்லூரி, ரேஸ்கோர்ஸ் சாலை  என்ற முகவரியில் பெறப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை இன்னும் செயலில் இருக்கும் நிலையில், அவர் பீகாரில் வாக்களிக்க  எஸ்.அய்.ஆர். மூலம் புதிய வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றிருப்பது தேர்தல் ஆணையமே முன்வந்து செய்த மோசடியாகவே கருத்தப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *