கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
1 Min Read

8.11.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

* மராத்தா இனத்தவர்க்கு ஓபிசி பிரிவில் இட ஒதுக்கீட்டிற்கு பலத்த எதிர்ப்பு. அமைச்சர் ஜக்கன் பூஜ்பால் அரசிற்கு எதிராக போர்க்கொடி.

* எஸ்சி, எஸ்டி-க்கு 22% பீகாரில் ஓபிசி-க்கு 65% இடஒதுக்கீடு அளிக்க முதலமைச்சர் நிதிஷ்குமார் முடிவு.

* அய்ந்து மாநில தேர்தல் முடிவுகள், “இந்தியா” கூட்டணியை மேலும் பலப்படுத்தும் என காங்கிரஸ் நம்பிக்கை.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஸநாதான ஒழிப்பு மாநாட்டில் தான் கலந்து கொண்டது ஜாதி ஒழிப்புக்கும் தீண்டாமைக்கும் எதிராகத் தான் என அமைச்சர் சேகர் பாபு நீதிமன்றத்தில் பதில்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு செய்வதற்காக கொலீஜியம் பரிந்துரைத்தவர்களின் பெயர் களை தங்கள் விருப்பம் போல் அரசு தேர்ந்தெடுப்பதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘இந்தியா எப்போதும் ஹிந்து ராஷ்டிராவாகவே இருந்து வருகிறது’ என்கிறார் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் ஹோசபாலே

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பீகாரில் 3இல் ஒரு பங்கு மக்கள் வறுமையில் வாழ் கிறார்கள். பீகாரில் 34% குடும்பங்கள் தினசரி வருமானம் ரூ.200 என அம்மாநிலத்தின்  ஜாதிவாரி கணக்கெடுப்பில் தகவல்.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *