மாநில அளவிலான பேச்சு போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிக்கு இரண்டாமிடம்

1 Min Read

கோவை, நவ. 8- இந்திய மருந்தியல் கூட்டமைப்/ (Indian Pharmaceutical Association) சார்பாக தேசிய அளவிலான பேச்சு போட்டியின் மாநில சுற்று (“Digital Health Revolution: Pharmacy in the Tech Age”) கோயம்புத்தூர் சிறீஇராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியில் 05.11.2025 அன்று நடை பெற்றது.

இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவி ப. அய்ஸ்வர்யா கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்து. ரூபாய் 750/- பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பரிசு வென்ற மாணவியை கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *