ஈரோடு திராவிடர் கழகப் பொதுக் குழுவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தவில் – நாதசுவரம் இசை முழங்க உற்சாக வரவேற்பு

1 Min Read

அரசியல்

ஈரோடு, மே 13 ஈரோட்டில் இன்று (13.5.2023) நடைபெறும் திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டத்திற்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் காலை 5.30 மணிக்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஈரோடு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த. சண்முகம் தலைமையில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழர் தலைவருடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், மோகனா வீரமணி, பொதுச் செயலாளர்  வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன் உள்ளிட்டோர்  வந்தனர்.

அப்போது தோழர்கள் விண்ணதிரும் வகையில் வாழ்த்தொலி முழக்கங்களை எழுப்பியும், நம்பியூர் தட்சிணாமூர்த்தி குழுவினரின் நாதசுவரம் – தவில் இசை முழக்கத்துடனும் வரவேற்பு அளித்தனர். ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளும், பொது மக்களும் தமிழர் தலைவருக்கு வணக்கம் தெரிவித்து மகிழ்ந்தனர். ரயில் நிலையம் முழுவதும் உற்சாகம் நிறைந்து காணப்பட்டது.

இதில் தஞ்சை இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன் தருமபுரி ஊமை. ஜெயராமன், ஈரோடு இரா. நற்குணன், பேராசிரியர் ப. காளிமுத்து, ஈரோடு கு. சிற்றரசு, ஈரோடு மணிமாறன், கோபி கழக மாவட்ட தலைவர் 

ந. சிவலிங்கம், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மு. சென் னியப்பன், மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, பேராசிரியர் ப. கமலக்கண்ணன், நகர தலைவர் கோ. திருநாவுக் கரசு, நகர செயலாளர் தே. காமராஜ், ஆத்தூர் சுரேஷ், செல் வக்குமார், இளைஞரணி அச்சூரியா உள்ளிட்ட தோழர்கள்   பங்கேற்றனர்.

தமிழர் தலைவர் வருகையை முன்னிட்டு ஈரோடு நகர் முழுவதும் கழகக் கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. ரயில் நிலையத்திலிருந்து கழகக் கொடியை ஏந்தி தோழர்கள் சூழ்ந்து வரவேற்று அழைத்து மகிழ்ந்தனர். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *