நான் வழக்குகளை விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்பவில்லை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வேதனை

1 Min Read

புதுடில்லி, நவ.5 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, தீர்ப்பா யச் சீர்திருத்தச் சட்டத்தின் அரசியல மைப்புச் சட்ட சவால்கள் தொடர்பான மனுக்களை விசாரித்தது.

இந்த வழக்கை அய்ந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வுக்கு அனுப்பக் கோரி ஒன்றிய அரசு திடீரென விடுத்த கோரிக்கையை உச்சநீதி மன்றம் கடுமையாக விமர்சித்தது.

இது தொடர்பாக தலைமை நீதிபதி, கூறும்போது ‘‘ஒன்றிய அரசு இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்து, நீதிமன்றத்தில் தந்திரங்களைக் கையாள்வதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை’’ என்று குறிப்பிட்டார்.

மனுதாரர்களின் வாதங்களைக் கேட்ட பிறகு, ஒன்றிய அரசு இத்தகைய கோரிக்கையை முன்வைப்பது அதிர்ச்சி யளிப்பதாக அமர்வு தெரிவித்தது.

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்  வரும் நவம்பர் 23, 2025 அன்று பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளார். இவருக்குப் பிறகு, நீதிபதி சூர்யா காந்த் இந்தியாவின் 53 ஆவது தலைமை நீதிபதியாக நவம்பர் 24, 2025 அன்று பதவியேற்க உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *