சென்னை, நவ.3 தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீ கரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிக ளின் உறுப்பினர்களுடனான ஆலோ சனைக் கூட்டம் நவ.6 ஆம் தேதி மூத்த அமைச்சர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
செய்தி விவரம் வருமாறு:
கரூரில் 41 பேர் பலி!
கடந்த 27.9.2025 அன்று கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க…
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியதன்படி, தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிப்பதற்காக தேர்தல் ஆணையத்தால் அங்கீ கரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஓர் ஆலோசனைக் கூட்டம் 6.11.2025 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10 ஆவது தளத்தில் மாண்புமிகு மூத்த அமைச்சர்களின் தலைமையில் நடத்தப்பட உள்ளது.
இக்கூட்டத்தில் பங்கு பெறக் கோரி அரசு சார்பில் அழைப்புக் கடிதம் மேற்படி அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பப்பட உள்ளது.
