கொடைக்கானல் சென்ற ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு

1 Min Read

திண்டுக்கல், மே 15 அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, தமிழ்நாடு ஆளுநர்ஆர்.என்.ரவி நேற்று (14.5.2023)  மாலை கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டார். இதற்காக அவர், சென்னை யில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். பின் னர் அங்கிருந்து கார் மூலம் அவர் கொடைக்கானலுக்கு மாலை 5.30 மணிக்கு வந்தடைந்தார்.

 முன்னதாக கொடைக்கானலுக்கு சென்ற தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் காட்டுவதற்காக வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டு வந்தனர். அப்போது, ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டபடி கருப்பு பலூனை கையில் பிடித்தபடி ஊர்வலமாக வந்தனர். அவர்களை நிலக்கோட்டை காவல்துறை துணைக் கண் காணிப்பாளர்  முருகன், வத்தலக்குண்டு காவல் ஆய் வாளர் முருகன் மற்றும் காவலர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமையில் 40 பேர் கைது செய்யப்பட்டனர். வத்தலக்குண்டுவில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்ட அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.  

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *