பக்கவிளைவு இல்லாத ஒயர்லெஸ் பேஸ்மேக்கர்!

2 Min Read

இதயத்துடிப்பு சீரற்றதாகவோ, மிக மெதுவாகவோ, மிக வேகமாகவோ இருந்தால், படபடப்பு, தலைச்சுற்றல், மயக்கம், சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதிகரித்து வரும் இப்பிரச்சினைக்கு பெரும்பாலும் ‘பேஸ் மேக்கர்’ பொருத்துவது தான் தீர்வு.

இதயத் துடிப்பை இயல்பாக்கவும், சீரற்ற மின் அதிர்வுகளால் ஏற்படும் அறிகுறிகளைப் போக்கவும் பேஸ்மேக்கர் பயன்படுகிறது.

மின் சாதனமான இக் கருவி, இதய அறைகளுக்கு இடையே உள்ள மின் துாண்டுதல்களை ஒழுங்கு படுத்தி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

தற்போது வழக்கத்தில் உள்ள பேஸ்மேக்கரில், துடிப்பைத் துாண்டும் பல்ஸ் ஜெனரேட்டர், இதயத்துடன் பேஸ்மேக்கரை பொருத்த வசதியாக மின் முனையுடன் இணைந்த தாமிரக் கம்பிகள் இருக்கும்.

கழுத்து எலும்பின் கீழ் பொருத்தப்பட்டு, இதயத்தின் மேல், கீழ் அறைகளுடன் தாமிர கம்பிகள் இணைக்கப் படும்.

அறுவை சிகிச்சை செய்து மேல் தோலுக்கு கீழ் பேஸ்மேக்கர் பொருத்த சில நாட்கள் மருத்துவமனையில் உள் மருத்துவ பயனாளியாக தங்க வேண்டும்.

கருவி பொருத்தப்பட்ட பகுதியில் தோல் சற்று மேடாகத் தெரியும். இதயத் துடிப்பை சீராக்க செயற்கை கருவியை சார்ந்திருக்கிறோம் என்ற எண்ணம் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இது தவிர, தொற்றுகள், கருவி பொருத்திய இடத்தில் வீக்கம், ரத்தக் கசிவு, ரத்தக் குழாயில் அடைப்பு, கம்பி முறிவு உட்பட பல பக்க விளைவுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. அறுவை சிகிச்சை செய் வதால் ஏற்பட்ட தழும்புகள், வீக்கம் அதிக நாட்கள் இருக்கும். இதற்கு மாற்றாக தற்போது ஒயர்லெஸ் பேஸ்மேக்கர் அறிமுகம் ஆகியுள்ளது.

தோலுக்கு கீழ் அறுவை சிகிச்சை செய்து, வழக்கமான பெரிய வைட்டமின் மாத்திரை அளவில் உள்ள பேஸ் மேக்கர் பொருத்து வதற்கு பதிலாக, இந்த ஒயர்லெஸ் பேஸ்மேக்கரை, இடுப்புப் பகுதியில் உள்ள ரத்தக் குழாய் வழியாக செலுத்தி, நேரடியாக இதயத்தின் கீழ் வலது அறைக்குள் பொருத்துவார்கள். பேஸ் மேக்கர்,-இதய அறைகளை இணைக்கும் கம்பிகள் அவசியம் இல்லாததால் நோய்த்தொற்று அபாயம் குறையும்; தழும்பும் ஏற்படாது. இதயத்தின் இயல்பான துடிப்பை அறிந்து செயல்படும் நுண்ணறிவு வழி முறைகள் உடையது இந்தப் புதிய கருவி.

இது இதயத்தின் கீழ் அறையில் பொருத்தப்பட்டு, மேல் அறையுடன் இயல்பான தொடர்பை ஏற்படுத்துகிறது. முழுமையான இதய அடைப்பு உள்ளவர்களுக்கு, இது இதயத்தின் இரண்டு வலது அறைகளுக்கும் இடையே தடையற்ற ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, இயல்பான இதயத் துடிப்பை உறுதி செய்கிறது.

இந்தப் புதிய பேஸ் மேக்கர் வழக்கமான பேஸ் மேக்கர்களைப் போல, மார்புத் தோலின் கீழ் தழும்போ, இதயம் சீராக செயல்பட ஒரு கருவி பொருத்தப்பட்டு உள்ளது என்ற உணர்வையோ
தராது.

இதனால் மன அழுத்தம் வெகுவாக குறைந்து, பாதுகாப்பு உணர்வு ஏற்படுகிறது. இந்த புதிய தொழில்நுட்பத்தால், அறுவை சிகிச்சை தொடர்பான சிக்கல்கள் 63 சதவீதம் குறைவதாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

எனி னும், கம்பியில்லா பேஸ்மேக்கரைப் பொருத்த சிறப்புத் திறனும், நிபுணத்துவமும் தேவைப்படும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *