சந்திராயனை ஏவி நிலவை ஆய்வு செய்ததன் மூலம் இந்தியா உலக அரங்கில் புகழ்பெற்றுள்ளது அரசு கல்லூரி மேனாள் மாணவி நிகர் ஷாஜி கருத்து

Viduthalai
1 Min Read

அரசியல்

நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த 2020 மற்றும் 2021ஆம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

கல்லூரி முதல்வர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி மய்ய நிகழ்ச்சி இயக்குநரும், அரசு பொறியியல் கல்லூரியின் மேனாள் மாணவியுமான நிகர் ஷாஜி கலந்து கொண்டு மாணவ, மாணவிக ளுக்கு பட்டங்களையும், சிறப்பிடம் பெற்றவர்க ளுக்கு தங்கப் பதக்கங்களையும் வழங்கினார்.

பட்டம் பெறுவதற்காக 1,152 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டி ருந்தது. இதில் முதலில் இளநிலை படிப்பில் 542 பேரும், முதுகலை படிப்பில் 56 பேரும் என மொத்தம் 598 பேர் பட்டங்களை பெற்றுக் கொண்டனர். பின்னர் சிறப்பு விருந்தினர் நிகர்ஷாஜி கூறும்போது, இந்த கல்லூரியின் மேனாள் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன். இந்தியா விண்வெளியில் முன் னேற்றம் கண்டு வருகிறது. மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறது. சந்திராயன்-1 மற்றும் சந்திராயன்-2 ஏவியதன் மூலம் உலக அரங்கில் இந்தியா புகழ் பெற்று உள்ளது என்றார். இதில் கல்லூரி பேராசிரியர் கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *