2025 – 2026 கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு

சென்னை, அக் 15 தமிழ்நாட்டில் 2025 – 2026 ஆம் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இனி பிளஸ் 2 வகுப்புக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், அதன் மதிப்பெண் பட்டியல் மட்டுமே அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 – 2018 ஆம் கல்வியாண்டு முதல், தமிழ்நாட்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரண்டு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு, இரண்டு வகுப்புகளிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுடன் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டு வந்தது.

சமீபத்தில், மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டபோது, ஏற்கனவே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 10, பிளஸ் 1, பிளஸ் 2 என்ற கல்வி முறையே தொடரும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது, பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும் 2025 – 2026ஆம் கல்வியாண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி பிளஸ் 2 மட்டுமே பொதுத்தேர்வாக நடத்தப்பட்டு, அதன் மதிப்பெண் பட்டியல் மட்டுமே அரசு தேர்வுத் துறையால் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

மேலும், ஏற்கெனவே பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக, வரும் 2030 ஆம் ஆண்டு வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு நடத்தி, அவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்கவும் தேர்வுத் துறைக்கு அனுமதி வழங்கி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

 

நவ.5, 6இல் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு

சென்னை, அக்.15 நவ.5, 6இல் தலைமைச் செயலகத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2 நாள்கள் ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் மாநாடு நடைபெறுகிறது. மக்கள் நல திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள், சட்டம்-ஒழுங்கு குறித்து முதலமைச்சர் விரிவாக ஆய்வு செய்கிறார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *