2016 இல் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை திரும்பப் பெற்றது 2023 ஆம் ஆண்டில் ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெற்றது

Viduthalai
3 Min Read

அரசியல்

புதுடில்லி, மே 20  இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மே 23-ஆம் தேதி முதல் வங்கிகள் மூலமாக மாற்றிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இதற்கு செப்.30-ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அனைத்து ரூ.2000 நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ள நிலையில் வங்கிகள் அந்த நோட்டுகளை பொது மக்களுக்கு விநியோகிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி நேற்று (19.5.2023) வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2016-ஆம் ஆண்டு நவ.8-ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் வாரியக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அப்போது புழக்கத் தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன. அதற்கு மாற் றாக, பொருளாதாரத்தில் கரன்சி களுக்கான தேவையை நிறைவுசெய்யும் வகையில் புதிதாக முதன்முதலில் ரூ.2000 நோட்டுகள் 2016 நவ.2-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டன. ரிசர்வ் வங்கி சட்டம் 24(1) பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.பொருளாதாரத்தில் இதர மதிப்புகளில் கரன்சி நோட்டுகள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்வதற்காகவே ரூ.2000 நோட்டுகள் அப்போது வெளியிடப்பட்டன.

  இந்த நிலையில், கடந்த 2018-_2019ஆ-ம் ஆண்டு முதல் ரூ.2000 நோட்டுகளை அச்சிடுவது முழுவது மாக நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது புழக்கத்தில் உள்ள 89 சதவீத ரூ.2000 நோட்டுகள் கடந்த 2017 மார்ச் மாதத்துக்கு முன்பாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டவை ஆகும். எனவே, பொதுவெளியில் ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் என்பது தற்போதைய நிலையில் பெருமளவு குறைந்துவிட்டது.

குறைந்துபோன புழக்கம்: அதன்படி, உச்சபட்சமாக கடந்த 2018 மார்ச் 31-ஆம் தேதி ரூ.6.73 லட்சம்கோடி மதிப்புக்கு புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகள் ரூ.3.62 லட்சம் கோடியாக குறைந்துவிட்டது. இது, மொத்த பணப் புழக்கத்தில் 10.8 சதவீதம் மட்டுமே. இந்த நிலையில், கரன்சி புழக்கத்தின் தேவையை நிறைவு செய்ய இதர மதிப்புடைய கரன்சி நோட்டுகளே போதும் என்பதால் ரூ.2000 நோட் டுகளை திரும்பப் பெறும் முடிவுக்கு ரிசர்வ் வங்கி தற்போது வந்துள்ளது. ‘கிளீன் நோட் பாலிசி’ என்ற அடிப் படையில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

 ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறும் அறிவிப்பு வெளியிடப்பட்டா லும், சட்டப்பூர்வ அடிப்படையில் அந்த நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும். 

4 மாதங்களுக்கு மேல் அவகாசம்

பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மே 23ஆ-ம் தேதி முதல் வங்கிகளில் இதர மதிப்புடைய கரன்சிகளாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு செப்.30ஆ-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகளில் கூட்டம் கூடுவதை தடுக் கவும், வழக்கமான பணிகளைஅவர்கள் மேற்கொள்ள வசதியாகவும் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.20,000 மதிப்பிலானநோட்டுகளை மட்டுமே தனிநபர் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும்.

இதுதொடர்பாக, அனைத்து வங்கிகளுக்கும் வழிகாட்டு நெறி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.வங்கிகள் மட்டுமின்றி, ரிசர்வ்வங்கியின் 19 மண்டல அலுவலகங்களிலும் ரூ.2000 நோட்டுகளை வரும் செவ் வாய்க்கிழமை (மே 23) முதல் மாற்றிக் கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.  இனி புழக்கத்தில் விடக்கூடாது: அனைத்து ரூ.2000 நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ள நிலையில்வங்கிகள் அந்த நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட் டுள்ளது. இந்தஉத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *