உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீடுக்குத் தடையாம்! : உச்சநீதிமன்றத்தை அணுக தெலங்கானா அரசு முடிவு

அய்தராபாத், அக்.13-  உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக கூறி தெலங்கானா அரசு கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு கடந்த அக்டோபா் 9-ஆம் தேதி தெலங்கானா உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

மேலும், பொதுத் தொகுதியின் அடிப்படையில் தோ்தல் நடைபெறும் என மாநில தோ்தல் ஆணையம் அறிவிக்கவும் நீதிமன்றம் உத்தர விட்டது. இதையடுத்து, கடந்த செப் டம்பா் 29-ஆம் தேதி வெளியிடப்பட்ட உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக அக்டோபா் 9-ஆம் தேதி மாநில தோ்தல் ஆணையம் அறிவித்தது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட முடிவு குறித்து அமைச்சரவை சகாக்களுடன் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி 10.10.2025 அன்று இரவு ஆலோசனை நடத்தினார். இதில், மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, தெலங்கானா மேலி டப் பாா்வையாளா் மீனாட்சி நடராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா். அப்போது, இந்த விவகாரம் தொடா் பாக உச்சநீதிமன்றத்தை நாட தெலங் கானாஅரசு முடிவு செய் துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இதனிடையே, தெலங்கானா உயா்நீதிமன்ற உத்தரவு குறித்து மாநில தோ்தல் ஆணையம் சட்ட வல்லுநா்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட முடிவை எடுக்க உள்ளதாக வட்டாரத் தகவல் கள் தெரிவித்தன.  முன்னதாக, உள்ளாட்சி அமைப்புகளிலும், வேலைவாய்ப்பு, கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் 42 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று கடந்த ஆண்டு தெலங்கானா பேரவையில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இரு மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி டில்லியில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆா்ப்பாட்டம் நடத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *