வேதியியலில் புதிய கண்டுபிடிப்புகள் 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஸ்டாக்ஹோம்,அக்.9- உலோக-கரிம கட்ட மைப்பை உருவாக்கிய ஜப்பான், ஆஸி. மற்றும் அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள் 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் அறி விக்கப்பட்டு வருகிறது. மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக் கப்பட்டுள்ள நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசும் அறிவிக் கப்பட்டுள்ளது. ஜப்பா னின் கியோட்டோ பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் சுசுமு கிடாகவா, மெல் போர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் ராப்சன் மற்றும் கலி போர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் உமர் எம். யாகி ஆகியோர் உலோக – கரிம கட்ட மைப்பை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டனர். இவர்கள் உருவாக்கிய கட்டமைப்பில் உள்ள பள்ளங்களில் மூலக் கூறுகள் உள்வந்து வெளியே செல்லும். பாலைவனப் பகுதி காற்றிலிருந்து தண்ணீரை எடுக்கவும், தண்ணீரில் உள்ள மாசுக்களை அகற்றவும், கார்பன் டை ஆக்சைடை ஈர்க்கவும், ஹைட்ரஜனை சேமிக்கவும், இந்த உலோக -கரிம கட்டமைப்பை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர்.

வேதியியல் ஆராய்ச்சி யாளர்கள் சந்திக்கும் சவால்களுக்கு தீர்வு காண உலோக – கரிம கட்டமைப்பு புதிய வாய்ப்புகளை அளித்துள்ளதால், இந்த கட்டமைப்பை உருவாக்கிய 3 விஞ்ஞானி களுக்கும் வேதியிய லுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக ‘தி ராயல் ஸ்வீடன் அறிவியல் அகாடமி’ அறிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *