மாற்றுத் திறனாளி மாணவரின் சாதனை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி கடந்தார்

1 Min Read

ராமேசுவரம், அக்.7- சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் பெரியார் செல்வம். இவருடைய மனைவி பத்மப்ரியா. இவர்களது மகன் புவி ஆற்றல் (வயது 12). மாற்றுத் திறனாளியான இந்த சிறுவன் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். நீச்சல் வீரர் ஆன இவர் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக்நீச்சல் போட்டியில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை நீந்தி சாதனை படைக்க வேண்டும் என விரும்பினார்.
அதன்படி ராமேசுவ ரத்தில் இருந்து கடந்த 3ஆம் தேதி சிறுவன் புவிஆற்றல் மற்றும் பெற்றோர், நீச்சல் பயிற்சியாளர் உள்ளிட்டோர் படகு மூலம் இலங்கை தலை மன்னாருக்கு புறப்பட்டு சென்றனர். இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து புவி ஆற்றல் தனுஷ் கோடி நோக்கி நீந்த தொடங்கினார்.
4.10.2025 அன்று பகல் 12 மணி அளவில் தனுஷ்கோடி வந்தார். சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தை 9 மணிநேரம் 11 நிமிடத்தில் கடந்து
சிறுவன் சாதனை படைத்தார்.
இந்த சிறுவனை இந்திய கடலோர காவல் படையினர், பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் சுற்றுலா பயணிகள் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *