வாசிங்டன், அக்.7- அமெரிக்காவின் பிட்ஸ் பர்க் நகரில் உணவு விடுதி நடத்தி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 51 வயதுடைய ராகேஷ் ஏகபன் உணவகத்துக்கு வெளியே நடந்த சண் டையை விலக்கிவிட முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளியை காவல் துறையினர் சுட்டுப் பிடித் துள்ளனர்.
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஏகபன் என்பவர் உணவுக் கடை நடத்தி வந்தார். இவரது உணவகத்துக்கு வெளியே, திடீரென இரண்டு பேர் வாக்குவாதத்தில் ஈடுபட் டனர். பின்னர் அது சண்டையை மாறியது. அப்போது சண்டையை விலக்கிவிட முயற்சித்த போது, ராகேஷ் ஏகபன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச்சூடு நடத் தியவன் 37 வயதான ஸ்டான்லி யூஜின் என்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கொலையாளியை காவல் துறையினர் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்த மோதல் உணவகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது என காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த மோதலுக்கான கார ணம் குறித்து விசாரணை நடக்கிறது.
அமெரிக்காவின் டல்லாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயதான சந்திரமவுலி நாகமல்லையா அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் கோடரியால் கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட சில வாரங்களுக்கு பிறகு இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
சில நாள்களுக்கு முன், டல்லாஸ் நகரில் அடையாளம் தெரியாத நபரால் அய்தராபாத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் சந்திரசேகர் போலே, 27, சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் தொடர்ந்து இந்தியர்கள் கொல்லப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.