புதுக்கோட்டை அருகே 1,800 ஆண்டுகள் பழைமையான புத்தர் சிலை கண்டெடுப்பு!

1 Min Read

புதுக்கோட்டை, அக. 6 – புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுக்கா, கரூரில் சுமார் 1800 ஆண்டுகள் பழைமையான  புத்தர் சிலை கண்டெடுக் கப்பட்டுள்ளது.

அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர்  காளிதாஸ் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் மேற்கொண்ட ஆய்வின்போது இந்தக் கலைப் பொக்கிஷம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆய்வாளர்கள் குழுவி னர் இந்தச் சிலையின் சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் நுணுக்கமாக இருப்பதை உறுதி செய்தனர். , இந்தச் சிலை தமிழர்கள் வாழும் பகுதியான வட இலங்கையில்  உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதி களான: அனுராதபுரம் முல்லைத்தீவு போன்ற இடங்களில் உள்ள புத்தர் சிலைகளுடன் அதிக ஒற்றுமை கொண்டிருப்ப தாகத் தெரிவித்து ள்ளனர்.

இதன்மூலம், இப்பகுதிக்கும் இலங்கைக்கும் இடை யேயான பழைமையான பண்பாட்டுத் தொடர்புகள் உறுதிப்படுத் தப்படுவதாகக் கருதப்படு கிறது.

ஈழப்பகுதி களில் கிடைத்த புத்தர்  சிலைகளுடன்  ஒற்றுமை: ஆய்வாளர்கள் வியப்பு!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *