கலவரத்தால் வரும் பலன் இன்றே கைகூடுவதா யிருந்தாலும் கூட அமைதியையும், அறிவுடைமையையும், அன்பையும் கொண்டு நடத்துவதையே நான் விரும்புவேன். அதனால் கிடைக்கும் பலன் சற்று தாமதித்து வந்தாலும் நான் இதையே பெரிதும் விரும்புவேன். அது மாத்திரமல்ல; இவ்விதக் கலவரம், குழப்பம் இல்லாத கிளர்ச்சியே மக்களுக்கு உண்மையான நிரந்தரமான நல்வாழ்வை அடையச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளலாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’