பத்திரிக்கை நடத்துறது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல-பிரண்ட்லைன்

பத்திரிக்கை நடத்துறது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. மாத பத்திரிக்கைகள், மாதம் இருமுறை வெளிவரும் பத்திரிக்கைகள், வார பத்திரிக்கைகள் நடத்துவது அவ்வளவு கடினமான காரியம் அல்ல. ஆனால் தினசரி பத்திரிக்கை நடத்துவது சும்மா லேசான விஷயம் இல்லை.. அதுலயும் ஒரு குழுவின் கேப்டனாக இருந்து கொண்டு பத்திரிக்கை நடத்துவது மிகப்பெரிய சவால். அத்தகைய சவாலான பொறுப்பை பதிப்பு ஆசிரியராக விடுதலை பத்திரிக்கைக்கு 1962 முதல் இன்று வரை திறம்பட நடத்தி வரும் அய்யா கி.வீரமணி அவர்களின் ஓய்வறியா பணி ஆச்சரியம் மட்டுமல்ல அசாதாரணமும் கூட.. இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் கூட இவ்வளவு நீண்ட நெடிய காலம் ஒரு நாட் அவுட் பேட்ஸ்மேனாக தானே களமாடி வரும் தலைவராக இருந்து வருபவர் ஆசிரியர் கி.வீரமணி மட்டுமே என்று இந்து நாளிதழின் பிரபல துணை வெளியீடான பிரண்ட்லைன் ஆசிரியர் திரு விஜய் சங்கர் வெகுவாக பாராட்டி பேசினார். ஆசிரியர் அவர்கள் தனது அயராத பணிக்காக கின்னஸ் சாதனை விருது பெறவும் தகுதி உடையவரே என்று அருமையாக பேசிய உரையை பெரியார் காணொலி வலைதளமான Periyar Vision OTT இல் இன்றே கண்டு மகிழுங்கள்.

– டி. பத்மநாபன்
சமய நல்லூர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *