சென்னையில் ரயில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, செப்.25 தென் மண்டல ரயில்வே லோகோ பைலட்டுகள் (ரயில் ஓட்டுநர்கள்) சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் கிலோ மீட்டர் அலவன்ஸினை 25 சதவீதம் உயர்த்த வேண்டும்; கிலோ மீட்டர் அலவன்ஸுக்கு வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்த வேண்டும்; பணியின் போது இயற்கை அழைப்புக்கும், உணவு இடைவேளைக்கும் நேரத்தை வரையறுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மண்டல ரயில்வே லோகோ பைலட்டுகள் (ரயில் ஓட்டுநர்கள்) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலியிடங்கள் பூர்த்தி செய்யாமை, நீடித்த வேலை நேரம், தொடர் இரவுப் பணிகள், போதிய ஓய்வின்மை போன்ற பிரச்சினைகளை முன்னிறுத்தி போராடி வரும் லோகோ பைலட்டுகள் இந்த முறை வேறு சில கோரிக்கைகளையும் வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.சி.ஜேம்ஸ், அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தின் தென் மண்டல ரயில்வே லோகோ பைலட்டுகள் சங்கத்தின் தலைவர் ஆர்.குமரேசன், சங்கத்தின் மத்திய அமைப்பு செயலாளர் வி.பாலசந்திரன் மற்றும் தெற்கு ரயில்வேயின் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ரயில் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *