தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணி : மாவட்ட வாரியாக 12 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

Viduthalai
2 Min Read

சென்னை, மே 26 தமிழ் நாட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட் டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில்ல் உள்ள 38 மாவட்டங்களில் சென்னையை தவிர 25 மாவட்டங்களுக்கு ஏற்கனவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள் ளனர். புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலைமைச் செய லாளர் வெ.இறையன்பு அறிவித்து இருக்கிறார். தமிழ்நாட்டில் புதிய அணைகள் கட்டும் பணி, குடிமராமத்து, நீர்நிலைகளை மீட்டெடுத்தல், நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் உள் ளிட்ட பணிகளை கண்காணிக்க தனியாக அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட் டுள்ளனர்.

பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வெள்ளநீர் தடுப்பு நடவடிக்கை, திடக்கழிவு மேலாண்மை, ஊரக பகுதி மக்களுக் கான அடிப்படை வசதி தேவைகள் உள்ளிட்ட பணி களையும் இவர்கள் கண்காணிப்பார்கள். மாவட்ட நிர்வாகத்துடன் கண்காணிப்பு அதிகாரிகள் ஒருங்கி ணைந்து செயல்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்புவார்கள். 

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட் டுள்ள அதிகாரிகள் பெயர் விவரம் வருமாறு:- 

அரியலூர் மாவட்டம்: -சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை செயலர் அருண்ராய், 

கோவை மாவட்டம்-: டிட்கோ நிர்வாக இயக் குநர் ஜெயசிறீ முரளிதரன்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்-: நெடுஞ்சாலைகள் துறை கூடுதல் தலைமைச் செயலர் பிரதீப் யாதவ், 

காஞ்சிபுரம் மாவட்டம்: -ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் பி.செந்தில்குமர்.

செங்கல்பட்டு மாவட்டம்-:  விவசாயத்துறை செயலாளர் சமயமூர்த்தி, 

திருவள்ளூர் மாவட்டம்: -சிவில் சப்ளை கமிஷனர் வி.ராஜாராமன். 

நாகப்பட்டினம் மாவட்டம்: -எரிசக்தித் துறைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா, 

நாமக்கல் மாவட்டம்: -தகவல் தொழில் நுட்பவியல் துறைச் செயலர் குமர குருபரன், 

புதுக்கோட்டை மாவட்டம்-: நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன். 

ராமநாதபுரம் மாவட்டம்-: மனிதவள மேலாண் மைத் துறைச் செயலர் நந்தகுமார்,

ராணிப்பேட்டை மாவட்டம்: -தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநர் சில்பா பிரபாகர் சதீஷ், 

சேலம் மாவட்டம்-: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநர் சங்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள் ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம்: -வணிகவரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, 

கரூர் மாவட்டம்: -மீன்வளத்துறை கமிஷனர் கே.எஸ். பழனிசாமி, 

மதுரை மாவட்டம்: -முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன்.

புதுக்கோட்டை மாவட்டம்: -எஸ்.நாக ராஜன், 

தஞ்சாவூர் மாவட்டம்: -ஆதி திராவிடர் நலத் துறை இயக்குனர்-ஆனந்த், 

தேனி மாவட்டம்: -கார்த்திக், 

தூத்துக்குடி மாவட்டம்: -சிஜி தாமஸ் வைத்யன், 

திருப்பூர்- மாவட்டம்: டான்சி, முதன்மை செயலாளர்- விஜயகுமார், 

வேலூர் மாவட்டம்: -ஆதி திராவிட பழங்குடி நலத்துறை செயலாளர் லஷ்மி பிரியா, 

விழுப்புரம் மாவட்டம்: -பஞ்சாயத்து ராஜ் ஆணையர் ஹர் சஷாய் மீனா, 

விருதுநகர் மாவட்டம்-: ஆனந்தகுமார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *