37 தமிழறிஞர்களின் நூல்கள் தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன அமைச்சர் பழனிவேல்ராஜன் தகவல்

சென்னை, செப்.23 கடந்த 4 ஆண்டுகளில் 37 தமிழறிஞர்களின் நூல்கள் தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்மின் நூலகம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழரின் அறிவுக் கருவூலங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் நோக்கத்துடன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மூலம் தமிழ் மின் நூலகம் தொடங்கப்பட்டு, செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மின் நூலகத்தில் இதுவரை லட்சக்கணக்கான அரிய வகை நூல்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள் மின் பதிப்பாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த பணி களின் ஒரு பகுதியாக நாட்டு டைமையாக்கப்பட்ட நூல்களும் மின் நூலகத்தில் தொடர்ந்து பதி வேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

37 தமிழறிஞர்களின் நூல்கள்

அந்தவகையில் திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 37 தமிழறிஞர்களின் நூல்கள் தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடை மையாக்கப்பட்டுள்ளன. இதில் இரா.இளங்குமரனார், செ.இராசு, கந்தர்வன், செ.திவான், தஞ்சை பிரகாஷ், நா.மம்மது, நெல்லை கண்ணன், விடுதலை இராசேந்திரன், சோம.லட்சுமணன், இரா.மோகன், கு.கோதண்டபாணி பிள்ளை, அம்சவேணி பெரியண்ணன், மா.சு.சம்பந்தன், கோ.முத்துப்பிள்ளை ஆகிய 14 அறிஞர்களின் படைப் புகள் இதுவரை https://tamildigitallibrary.in/ என்ற தமிழ் மின் நூலகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து பல்வேறு நாட்டு டைமையாக்கப்பட்ட நூல்களை பதிவேற்றும் பணிகளும் சீரிய முறையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *