கவிப் பேரரசு வைரமுத்து புகழாரம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘‘உன் தாடி முளைத்தபோது சமூகத்துக்கு மீசை முளைத் தது’’ என தந்தை பெரியார் பிறந்தநாளை ஒட்டி கவிஞர் வைரமுத்து புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவிதை:

உன் தாடி முளைத்தபோது

சமூகத்துக்கு மீசை முளைத்தது

இருட்டுச் சுவர்

இடியத் தொடங்கியது

கி.மு – கி.பி. பழைய கணக்கு

பெ.மு. – பெ.பி. புதிய கணக்கு

நூற்றாண்டுகளாய்

எங்கள் புலிகள்

ஆடுகளுக்குப்

புல்பறித்துக் கொண்டும்

பல்தேய்த்துக் கொண்டுமிருந்தன

நகத்தில் கூர்மையும்

முகத்தில் மீசையும்

உண்டென்பதை

புலிகளுக்கு நீதான்

புலப்படுத்தினாய்

நீறுகளை ஊதி

நெருப்பை அடையாளம்காட்டிய

சுற்றுப்பயணச் சூறாவளி நீ

வர்க்கப் போரின்

இன்னோர் வடிவம்

உன் தர்க்கப்போர்

நீ சொன்ன பிறகுதான்

செருப்புத் தைத்தவன்

கையில் இருந்ததைக்

காலில் அணிந்தான்

நிர்வாணமாய்

நெசவு செய்தவன்

ஆடை சூடினான்

கலப்பையில் எழுதியவன்

காகிதத்தில் எழுதினான்

சூரியன் வந்ததும்

உடுக்கள் என்னும்

வடுக்கள் மறைவதுபோல்

உன் வருகையால்

வெள்ளை அழுக்கு

வெள்ளாவிவைத்து

வெளுக்கப்பட்டது

பழைமைவாதப் பாம்படித்ததும்

ஓலைக் குடிசைகளின்

ஒட்டடை அடித்ததும்

புலம்பும் புராணங்களுக்கெதிராய்ச்

சிலம்பம் சுற்றியதும்

உனது ஒற்றைக் கைத்தடிதான்

மூலக்கூறு பிரித்தால்

கடைசிவரை

தங்கம் தங்கம்தான்

உன் மரணத்தின்

முன் நிமிடம்வரை

நீ பேசும்புயல்தான்; பெரியார்தான்

கருப்பு நிலக்கரி வைரமாகக்

காலம் ஆகும்

கருப்பு வண்ணம் புரிதல்பெற

இன்னும் ஒரு யுகமாகும்

புகழ் வணக்கம்.

இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து தமது கவிதையில் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *