பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை!

1 Min Read

இன்று (14.9.2025) காலை சென்னை பெரியார் திடலுக்குத் தோழர்களோடு வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பயனாடை அணிவித்து, வாழ்த்துத் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்டத் தலைவர் வேம்புலி வெங்கடேசன், ஏ.அய்.டி.யு.சி. வடசென்னை மாவட்டத் தலைவர் எம்.எஸ்.மூர்த்தி, கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் பகுதி செயலாளர் சந்தோஷ்குமார், மாவட்டத் துணை செயலாளர் ஜி.சுப்பிரமணி, வட்டசெயலாளர் பார்த்திபன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் உடன் வருகை புரிந்தனர்.  திராவிடர் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேசு, வட சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் உள்ளிட்ட தோழர்கள், வட சென்னையிலிருந்து பிறந்து, வளர்ந்து  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *