நாட்டின் பொருளாதாரத்தை ஒன்றிய பாரதிய ஜனதா அரசு படுகுழியில் தள்ளிவிட்டது காங்கிரஸ் குற்றச்சாட்டு

2 Min Read

சென்னை, மே 29 – 9 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு துறைகளில் தோல்விகள் சந்தித்ததன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை ஒன்றிய பாரதீய ஜனதா அரசு படு குழியில் தள்ளிவிட்டது என்று காங்கிரஸ் தேசிய செய்தி தொடர் பாளர் ராஜீவ் கவுடா குற்றம் சாட்டியுள்ளார். 

சென்னை சத்தியமூர்த்திபவ னுக்கு அகில இந்திய காங்கிரஸ் ஆராய்ச்சித் துறை தலைவரும், தேசிய செய்தித் தொடர்பாள ருமான ராஜீவ் கவுடா வந்தார். அப்போது, அவருக்கு மாநில துணை தலைவர் கோபண்ணா, தலைமையில் வரவேற்பு அளிக்கப் பட்டது. இதில், துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக் குமார்  மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், மாவட்ட தலை வர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜ சேகரன், முத்தழகன், அடையார் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து, ராஜீவ் கவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

ஒன்றியத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளை நிறைவு செய் திருக்கிறது. இந்த 9 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் ஒன்றிய அரசு தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக, நாட்டின் பொரு ளாதாரம் படுகுழியில் தள்ளப்பட் டுள்ளது.

இந்தியாவில் விலைவாசி உயர் வும், வேலையின்மையும் ராக் கெட் வேகத்தில் அதிகரித்து இருக் கிறது. ஏழைகளின் கூலி குறைந் துள்ள நிலையில், வேலையின்மை யும் 30-40 சதவீதம் அதிகரித்துள்ளது. மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கையால் சிறு தொழில்கள் அழிந்தன.

விவசாயத்தை தாரை வார்க்கும் மோடியின் முயற்சி விவசாயிகளின் மாபெரும் போராட்டத்தால் முறி யடிக்கப்பட்டது. பெண்கள், தாழ்த் தப்பட்டோர், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடு மைகள் குறித்து மவுனம் காக்கிறார். 

கடந்த 9 ஆண்டுகளில், எதிர்க் கட்சிகள் மற்றும் தலைவர்களை பழிவாங்கும் அரசியலை தான் பாஜ செய்கிறது. அருணாச்சல பிரதேசம், கோவா, கருநாடகா, மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங் களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அர சாங்கங்களை மிருக பலத்தையும், பண பலத்தையும் பயன்படுத்தி கவிழ்த்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *