அய்.டி. துறையில் உலகம் முழுவதும் தமிழர்களின் பங்களிப்பு அதிகரிப்பு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்

2 Min Read

சென்னை செப்.13-

அய்.டி துறையில் உலகம் முழுவதிலும் தமிழர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது என்று தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

பொறியாளர்கள் மாநாடு

பன்னாட்டு தமிழ் பொறியாளர் கள் சங்கத்தின் முதல் மாநாடு மற்றும்கண் காட்சி சென்னை வர்த்தக மய்யத்தில் நேற்று (12.9.2025) நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், போக்கு வரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங் கேற்று, மாநாட்டை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் மூத்த விஞ் ஞானி ஏ.சிவதாணுப் பிள்ளை, இஸ்ரோ மேனாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: தமிழர்களின் ரத்தத்தில் பொறி யியல் ஊறியுள்ளது. பல நூறுஆண் டுகளுக்கு முன்பு தமிழர்களால் கட்டப்பட்ட துறை முகங்களே இதற்கு சான்று. உலகம் முழுவதும் உள்ள வர்த்தக மையங்களுடன் தமிழர்கள் பன்னெடுங்காலமாக பங்குதாரர் களாக இருந்துள்ளனர். இதற்கான சான் றாக, கீழடியில் ரோ மானிய காசுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

தமிழர்கள் பங்களிப்பு

மேலும், மாபெரும் அணைகள், சிறந்த கோயில்களை தமிழ்நாடு பொறி யாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டியுள்ளனர். குறிப்பாக, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மழைநீர் வடிகால்களுக்கு ஏற்ற வாறு சாய்ந்த கூரையில் இருந்து வடியும் மழைநீர் துவாரங்கள் கொண்ட தூண்கள் வழியாக நிலத் துக்கு சென்றடைகிறது.

அதேபோல, தமிழ்நாடு பொறியியல் துறையில் சிறந்து விளங்குவதற்கு சத்துணவு, இலவச மிதி வண்டிகள், மடிக்கணினிகள் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் முக்கிய காரணமாக உள்ளன. தமிழ்நாடு முழுவதும் கல்வியை ஊக்குவிப்பதன் பலனாக, முதுநிலை கல்வியில் தமிழ கம் முதன்மை இடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் 54 சதவீத மாணவர்கள் முதுநிலை கல்வியில் சேருகின்றனர். நமது மாநிலம் இந்தியாவின் 6சதவீத மக்கள்தொகையை மட்டுமே கொண் டுள்ளது. ஆனால், தேசிய அளவில் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதத்தை வகித்து வருகிறது. தமிழ்நாட்டின் அய்.டி சேவைகள் உலகமெங்கும் பெரும் பங்க ளிப்பை வழங்கி வருகின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதிலும் தமிழர்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது என்று கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *