சென்னை, செப்.12– தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (11.9.2025) விடுத்த வலைதளப் பதிவில், “பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில், ‘தமிழ்நாட்டைத் தலைகுனியவிட மாட்டேன்” எனும் உறுதிமொழியினை முன்மொழி வோம்!” எனச் சூளுரைத்துள்ளார்.
தி.மு.க. தலைவர் அவர்களின் வலைதளப் பதிவு வருமாறு:-
தமிழ்நாட்டின் மண்,- மொழி, – மானம் காக்க நமது ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளன.
அவர்கள் அனைவரும் ஒன்றி ணைந்து, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் (செப்.15) தமிழ்நாடெங்கும் 68,000+ பூத் வாரியாக முன்மொழியவுள்ள உறுதிமொழி:
“தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்!”
“ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத் தில் இணைந்துள்ள 1 கோடி + குடும் பத்தினரும் சேர்ந்து, ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!’ என உறுதி ஏற்கிறோம்!
நான், “தமிழ்நாட்டின் நாடா ளுமன்ற உறுப்பினர்களின் விகிதா சாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்” என உறுதி ஏற்கிறேன்.
நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் ‘SIR’-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனியவிடமாட்டேன்” என உறுதி ஏற்கிறேன்.
நான்,“நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத் தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்குஉரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒரு போதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்”என உறுதி ஏற்கிறேன்.
நான், “தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விட மாட்டேன்” என உறுதி ஏற்கிறேன்.
நான், “பெண்கள், – விவசாயிகள், – மீனவர்கள், -நெசவாளர்கள், -தொழிலாளர்கள்” என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை யும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ் நாட்டைத் தலைகுனிய விடமாட் டேன்” என உறுதி ஏற்கிறேன்.
இவ்வாறு அப்பதிவில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.