இதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடல்’ அரசு மாற்றுத்திறனாளிகள், திருநங்கையருக்கு முதல் முறையாக அரசின் இலவச வீடுகள் தேனூரில் புதிய நகரை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

2 Min Read

மதுரை, செப்.11  மதுரையில் மாற்றுத் திற னாளிகள், திருநங்கையர் உட்பட 400 பேருக்கு இலவச வீடுகளை கட்டி வழங்குவதற்காக புதிய நகரை உருவாக்கி டிசம்பருக்குள் முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் வழங்குவதற்கான ஏற் பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. தமிழ்நாடு அரசு சார்பில் இல வச வீட்டுமனை, பட்டாக் கள் என பல்வேறு நலத் திட்டங்கள் அவ்வப்போது வழங்கப்படுகின்றன. தற்போது மாநிலத்தில் வேறெங்கும் இல்லாத வகையில், மாற்றுத் திற னாளிகள், திருநங்கையர், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான தனி நகரை முதன்முறையாக மதுரையில் உருவாக்கி வருகின்றனர்.

மதுரை மேற்கு ஒன்றியம் தேனுார் ஊராட் சியில் கட்டப்புளி நகரில் இந்நகர் உருவாகிறது. 400 பேருக்கு இலவச வீடுகள் வழங்குவதற்காக, 10 ஏக்கருக்கும் கூடுதலான இடம் கையகப்படுத்தப ்பட்டுள்ளது. துரிதமான பணிகள் இதில் முதற் கட்டமாக 194 வீடுகள் கட்ட 4 ஒப்பந்ததா ரர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். கடந்த ஜூலை 28இல் வீடுகள் கட்டுவதற்கு அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து பணிகள் மளமளவென நடந்த தால், இரண்டே மாதங் களில் ‘லிண்டல்’ வரை வளர்ந்துள்ளன. இப் பணிகளை அமைச்சர், அதிகாரிகள் மட்டுமின்றி பயனாளிகளும் அடிக்கடி ஆய்வு செய்கின்றனர். சமீபத்தில் ஊரக வளர்ச்சி ஆணையர் பொன்னையா ஆய்வு செய்து பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

இவ்வீடுகள் ‘கலைஞர் அன்பு இல்லம்’ என்ற பெயரில் அமையும். தெருக்களில் வடிகால் வசதி, பூஞ்செடிகள், பூங்காக்கள், தனி ரேஷன் கடை, தெருவிளக்குகள், மேல்நிலை குடிநீர் தொட்டி, வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இணைப்பு உட்பட தேவையான அனைத்து அம்சங்களும் இருக்கும். பொதுவாக கலைஞர் வீடுகட்டும் திட்டத்தில் ஒரு வீட்டுக்கு ரூ.3.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. ஆனால், இங்கு வீட்டுமனை, வீடு எல்லாமே இலவசம்தான். கலைஞர் வீடுகட்டும் திட் டத்தில் உள்ள நிதிக் கும் கூடு தலாக வரும் தொகையை அமைச்சர் மூர்த்தியே வழங்க உள்ளார்.

யார் யாருக்கு முன்னுரிமை?

இதற்கான பயனா ளிகள் தேர்வில் முதற் கட்டமாக 72 மாற்றுத் திறனாளிகள், 37 திரு நங்கைகள், 85 வறுமைக் கோட்டுக்குகீழ் உள் ளோருக்கு முன் னுரிமை வழங்கப்பட்டுள் ளது. மீதியுள்ள வீடுகளுக்கு அடுத்த கட்டமாக தேர்வு நடைபெறும். இந்த வீடுகளை வருகிற தேர்தலுக்குள் முடித்து திறக்க ஏற்பாடு செய்தனர்.முதலமைச்சரின் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா கடந்த ஏப்ரல், மேயில் நடப்பதாக இருந் தது. பின்னர் தள்ளிப் போன விழா வரும் டிசம்பரில் நடக்க உள்ளது. அதற்காக மதுரை வரும் முதலமைச்சர் இந்நகரை திறந்து வைப்பார் என அதி காரிகள் தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *