ரூ.2,000 நோட்டுகளை மாற்ற அடையாள அட்டையா? நீதிமன்றம் தீர்ப்பு

1 Min Read

புதுடில்லி,மே31 – வங்கியில் ரூ.2000 நோட் டுக்களை மாற்றிக் கொள்ள எவ்வித அடையாள அட் டைகளும் கொடுக்க தேவையில்லை என டில்லி உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி யுள்ளது. 

நாடு முழுவதும் புழக் கத்தில் இருந்து வந்த ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறப் போவ தாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு தொடர்பாக மூத்த வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த வழக்கு டில்லி உயர்நீதி மன்றத்தில் கடந்த 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது,”மனுதாரர் தரப்பு வாதத்தில்,”ரூ.2000 நோட்டுக்களை எந்த அடிப்படை அடையாள அட்டையும் இல்லாமல் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்பதை எதிர்க்கிறோம்.

அதனால் அடையாள அட்டைகளுடன் ரூ.2000 நோட்டுகளை மாற்றும்படி புதிய உத்த ரவை நீதிமன்றம் பிறப் பிக்க வேண்டும்’’ என தெரிவித்தார். 

இதையடுத்து ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பராக் திரிபாதி,” ரூ.2000 நோட்டுக் களை திரும்பப் பெறுவது என்பது சட்டப் பூர்வமான நடவடிக்கையாகும்.

இதில் எந்தவித முறை கேடுகளும் நடக்க வாய்ப்பு கிடையாது’’ என தெரிவித்தார்.

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங் களையும் பதிவு செய்துக் கொண்ட டில்லி உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் வழங்கிய தீர்ப் பில்,‘‘ ரூ.2000 நோட்டுக் கள் திரும்பப்பெறும் விவகாரத்தில் அனைத்து உரிய விதிமுறைகளும் பின்பற்றப்படுவதாகவும், அதேபோன்று இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு கிடையாது என வும் ரிசர்வ் வங்கித் தரப் பில் வைக்கப்பட்ட வாதங் களை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது’’ என தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யா தாக்கல் செய் திருந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *