ரூ.2,000 நோட்டுகளை மாற்ற அடையாள அட்டையா? நீதிமன்றம் தீர்ப்பு

Viduthalai
1 Min Read

புதுடில்லி,மே31 – வங்கியில் ரூ.2000 நோட் டுக்களை மாற்றிக் கொள்ள எவ்வித அடையாள அட் டைகளும் கொடுக்க தேவையில்லை என டில்லி உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி யுள்ளது. 

நாடு முழுவதும் புழக் கத்தில் இருந்து வந்த ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறப் போவ தாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு தொடர்பாக மூத்த வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த வழக்கு டில்லி உயர்நீதி மன்றத்தில் கடந்த 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது,”மனுதாரர் தரப்பு வாதத்தில்,”ரூ.2000 நோட்டுக்களை எந்த அடிப்படை அடையாள அட்டையும் இல்லாமல் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்பதை எதிர்க்கிறோம்.

அதனால் அடையாள அட்டைகளுடன் ரூ.2000 நோட்டுகளை மாற்றும்படி புதிய உத்த ரவை நீதிமன்றம் பிறப் பிக்க வேண்டும்’’ என தெரிவித்தார். 

இதையடுத்து ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பராக் திரிபாதி,” ரூ.2000 நோட்டுக் களை திரும்பப் பெறுவது என்பது சட்டப் பூர்வமான நடவடிக்கையாகும்.

இதில் எந்தவித முறை கேடுகளும் நடக்க வாய்ப்பு கிடையாது’’ என தெரிவித்தார்.

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங் களையும் பதிவு செய்துக் கொண்ட டில்லி உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் வழங்கிய தீர்ப் பில்,‘‘ ரூ.2000 நோட்டுக் கள் திரும்பப்பெறும் விவகாரத்தில் அனைத்து உரிய விதிமுறைகளும் பின்பற்றப்படுவதாகவும், அதேபோன்று இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு கிடையாது என வும் ரிசர்வ் வங்கித் தரப் பில் வைக்கப்பட்ட வாதங் களை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது’’ என தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யா தாக்கல் செய் திருந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *