மேலூர் அருகே சிவப்புப் பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

1 Min Read

மேலூர்,மே31 – மதுரை மாவட்டம், மேலூர் அருகே புலிப்பட்டியில் உள்ள புலி மலையில், 2,100 ஆண்டுகளுக்கு முந் தைய கற்கால மனிதர்கள் வரைந்த சிவப்புப் பாறை ஓவியங்களை, தொல் லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து, மதுரை கோவில் கட்டடக்கலை சிற்பத்துறை ஆய்வாளர் தேவி கூறியதாவது:

புலி மலை பாறையில் மனித உருவங்கள், விலங் குகள், குறியீடுகள் என, 100க்கும் மேற்பட்ட சிகப்பு நிற ஓவியங்கள் உள்ளன.

இது, கற்காலத்தை சேர்ந்தவை என, கருதப்படுகிறது. மதுரை யில் ஆறு இடங்களில் இதுபோன்ற ஓவியங்கள் கண்டறியப்பட்டன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, சிவப்பு பாறை ஓவியங்களை 5,000 ஆண்டுகள் பழை மையானது என கருதப் படுகிறது.

இந்நிலையில், இப் பாறை ஓவியத்தின் காலம், 2,100 ஆண்டு களுக்கு முந்தையதாக இருக்க வாய்ப்பு உள்ளது.

-இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *