கருநாடக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு

1 Min Read

பெங்களூரு,மே31 – கருநாடக மாநி லத்தில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட் டுள்ளது. கருநாடகா சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் வென்று 20ஆம் தேதி முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமார் உள்பட 8 பேர் அமைச்சர் களாக பதவியேற்றனர்.

அதை தொடர்ந்து கடந்த 27ஆம் தேதி இரண்டாவது கட்ட அமைச்சரவை விரி வாக்கம் நடந்தது. இதில் 24 பேர் அமைச் சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கான துறைகள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து புதிய அரசா ணையை அரசு வெளியிட்டது. அதில் முதலமைச்சர் சித்தராமையா தனது வசம் நிதி, தகவல் மற்றும் உயிரியல், உளவுத்துறை மக்கள் தொடர்பு ஆகிய வற்றை வைத்துள்ளார். துணை முதல மைச்சர் டி.கே.சிவகுமாருக்கு பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனம், பெங் களூரு மாநகர மேம்பாடு, மாநகராட்சி, ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தினேஷ்குண்டுராவுக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையும், பரமேஸ் வருக்கு உள்துறையும், ராமலிங்க ரெட்டிக்கு போக்குவரத்து துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *