முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

1 Min Read

சென்னை, ஜூன் 1 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  சந்தித்துப் பேசவுள்ளதாக டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக தி.மு.க.வின் ஆதரவை கோருவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். டில்லியில் அரசு அதிகாரிகளை நியமிக்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் ஒன்றியஅரசு அவசரச் சட்டம் இயற்றியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, கொண்டு வரப்பட்டுள்ள இந்த அவசர சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் களை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார்.

Will be meeting Tamil Nadu CM Thiru @mkstalin in Chennai tomorrow (1st June) to seek DMK’s support against Centre’s unconstitutional-undemocratic ‘Anti-Delhi’ Ordinance. – Arvind Kejriwal (@ArvindKejriwal) May 31, 2023

இதன்படி, மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்துப் பேசுகிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *