முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினை வெளியீடு

Viduthalai
1 Min Read

அரசியல்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.6.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநர்  கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள் முன்னிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில்,   நீர்வளத் துறை அமைச்சர்  துரைமுருகன்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்,  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன்,   மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன்,   இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்   பி.கே. சேகர்பாபு,  அமைச்சர் பெருமக்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்  ஆர். பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு,  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.இரா. செல்வராஜ், துறைச் செயலாளர்கள், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர்  த. மோகன்,   உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *