வெளிநாடு சென்றாலும் முதலமைச்சரின் அக்கறை பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும் ஜெர்மனியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

செல்டோர்ஃப், செப்.1- தமிழ் நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க m;aரோப்பிய நாடுகளுக்கானப் பயணத்தை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஜெர்மனி சென்றடைந்தார்.

நேற்று முன்தினம் (30.08.2025) இரவு பெருமழை கொட்டித் தீர்த்தது.

இச் செய்தியறிந்ததும் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசியில் சென்னையில் உள்ள அதி-காரிகளை தொடர்பு கொண்டு சென்னை மாநகரில் பெய்த மழையால் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இது பற்றிய விவரம் வருமாறு:–

சென்னை மாநகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 30.08.2025 அன்று பெய்த மழை அளவு குறித்தும் அதனால் சாலைப்போக்குவரத்து, மழை நீர் வடிகால்மற்றும்தாழ்வான பகுதிகளில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் முதலமைச்சர் அவர்கள் தொலை பேசியில் கேட்டறிந்தார்.

மாநகரில் பெய்த கனமழையால் பெரிய அளவில் எவ்வித பாதிப்புகள் இல்லையெனவும் சுரங்-கப்பாதைகள் உள்ளிட்ட எல்லாப் பகுதிகளிலும் சாலைப்போக்குவரத்து சீராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், எத்தகைய மழைச் சூழலையும் எதிர்கொள்ள கூடிய அளவில் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் பெரு மழை காரணமாக பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணி-யாற்றிடவும் முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *