எடுத்துக்காட்டான நாடு சுவீடன்

1 Min Read

ஸ்டாக்ஹோம், ஜூன் 2- அய்ரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவீடனில் தினசரி புகைபிடித்தல் விழுக்காடு குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகளை வலியுறுத்துவ துடன், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி உலக புகையிலை இல்லா தினம் கடைப்பிடிப்படுகிறது. இந்த ஆண்டில், ‘உணவை அதிகரியுங்கள்; புகையிலையை அல்ல’ என்ற கருத்து பரப்பப்படுகிறது.

இந்நிலையில், சுவீடனில் தினசரி புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், புகைப்பிடிக்காதவர்கள் வசிக்கும் முதல் அய்ரோப்பிய நாடாக அது விரைவில் மாற உள்ளது.

புகைபிடிப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் அய்ந்து விழுக்காடு பேர் மட்டுமே புகைப்பிடிக்கின்றனர்.

இது, கடந்த ஆண்டு 5.6 விழுக்காடாக இருந்த நிலையில், இந்த ஆண்டு மேலும் குறைந்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன், மொத்த மக்கள்தொகையில், புகைப்பிடிப்பவர்களின் விழுக்காடு 20ஆக இருந்த நிலையில், தற்போது வெகுவாக அது குறைந்துள்ளது.

புகைபிடிப்பதால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு, இளைஞர்கள் மத்தியில் அதிகளவு இருப்பதே இதற்குக் காரணம்’ என சுவீடன் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கு புகைபிடிப்பதை கட்டுப்படுத்த அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்திய சுவீடன் புற்றுநோய் மய்யத்தைச் சேர்ந்த உல்ரிகா கூறுகையில், ”முதலில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை ஏற்படுத்தப்பட்டது.

”படிப்படியாக பள்ளி மைதானங்கள், உணவகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. புகையிலைப் பொருட்கள் மீதான வரிகள் உயர்த்தப்பட்டதும், அது பயன்பாட்டில் இல்லாததற்கு முக்கிய காரணமாகும்,” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *